தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 243 எழுத துடிக்கும் என் மனம்”

எழுத எழுத துளிர்க்குது
எழுத்து என்னை மயக்குது
எங்கெங்கோ இழுக்குது
எதையெதையோ சொல்லுது

பிறக்கும்போது அறியவில்லை
பிறப்பின் நோக்கம் புரியவில்லை
எங்கிருந்தோ ஓசையொன்று
எனக்காக ஒலித்ததின்று

கைவிரலின் நாட்டியத்தில்
கவிதை நடனம் புரியுது
தமிழன்னை பாடுகிறாள்
தமிழ்மழையாய்ப் பொழிகிறாள்

செந்தமிழின் வனத்தினுள்ளே
தொலைந்துபோன மகிழ்வெனக்கு
செம்மொழியின் அழகிலின்று
செப்புகிறேன் தமிழ்க் கவிதை

இலக்கணத்தை கற்காமல்
இலக்கியத்துள் அடங்காமல்
இதயத்துள் கண்ணதாசன்
இறைக்கின்ற தமிழூற்று

நானொன்றும் அறிஞனில்லை
நிச்சயமாய்க் கவிஞனில்லை
நெஞ்சம் பாடும் தமிழோசை
நிறைக்குதெந்தன் காகிதத்தை

உள்ளத்தின் ஆழத்தின் உருவாகும்
கவிதையெல்லாம் கருக்கட்டும்
கவிதையாகப் பிரசவிக்கும்
காலமெல்லாம் நிலைத்திருக்கும்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan