பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம் !
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு
கடந்து வந்த பாதையில்
*****************************
புலம்பெயர்ந்த நாட்டினில் புதுமைகள் படைக்க
பலம்கொண்ட ஆர்வலர் பணியினைத் தொட்டார்
பக்கத்தே இருந்து பாரியாரும் மகளும்
தக்கதுணை ஆகினர் தமிழ்மொழி வாழ்ந்திட
கண்அயரா எத்தனை கணங்கள் கடந்து
விண் தொடவே எழுந்து வீரியம் கண்ட
ஊடகமது உருளும் உலகில் வலம்வநது
பாடங்கள் பலவும் பாலகர் முதலாய்
பெரியவரும் பெற்றனர் பயன்கள் பலவாய்
காரியங்கள் ஆற்றுகையில் கடந்து வந்த
இன்னல்கள் ஓராயிரம் இடைவிடா முயற்சி
தன்னலமில்லா சேவை தரணியில் புகழுடன்
ஆயிரத்தைத் தொட்டு அதிகமாய்த் தலைப்புகள்
பாயிரங்கள் படைத்து படைப்பில் உயர்ந்த
எழுத்தாளர் எத்தனை ஏராளம் பேர்தானே
விழுதுகளைக் கண்டு வீச்சுடனே இயங்கும்
ஊடகத்தை உரமுடனே உயர்த்திடவே உறவுகளாய்
நாடளவில் பரந்த நல்மனங்கள் வாழ்கவே!

கவிதைநேரத் தொகுப்பாளினிகட்கு நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக!
திரு.நடா மோகன் குடும்பத்தினருக்கு அன்புகலந்த நன்றி கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading