26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சக்தி சிறினிசங்கர்
வியாழன் கவிதை
விடியலில் உன்னதம்!
அகங்காரம் அற்று அனைவரும் சமமென
பகலவன் கெடுக்கிறான் பளிச்சென்ற ஒளியினை
வெளிறிக்கிடக்கின்ற வெற்றுவாழ்வு மலர்ந்திடவே
தளிர்விட்டுத் தழைக்கின்ற தாவரங்கள் சொல்லுதே
அர்த்தம் பொதிந்த எதிர்காலம் மலரக்
கர்வம் கொண்டதில்லை கதிரவன் ஒருபோதும்!
விளக்கின் ஒளிபோல விடியலும் பிரகாசிக்கும்
களங்கம் இல்லாக் கனிவான காலையில்
இமைவிழிக்க இருள்அகல உதயமாகும் நாளது
சுமையில்லாப் பொழுதாகி சுகராகம் இசைத்திட
தளர்விலா மனத்துடன் தடைகளும் தாண்டியே
வளமாகும் வாழ்வுக்கு வழிகளைத் தேடி
நலமோடு வாழ்ந்து நாடும்வீடும் சிறக்க
விடியலைத் தேடி விடாமுயற்சி செய்து
படிக்கற்களாய் பகிர்ந்து ண்டு வாழ்தலே உன்னதமே!
,நன்றி வணக்கம்!
கவிதைநேரத் தொகுப்பாளினிகளுக்கும்
வாணி மோகனுக்கும் நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகுக!

Author: Nada Mohan
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...
24
Jun
வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்...