“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

வணக்கம்@
ஈரம்
*****
மொழிதனில் இருந்தது தாகம்
வழிவழி வந்தது மோகம்
விழிதனை நிறைக்குது ஈரம்!
நஞ்சினை உண்டவர் வீரம்
நெஞ்சினை நிறைக்குது பாரம்
அஞ்சன விழிகளில் ஈரம்!
விண்தனில் இருந்து வீழ்ந்தது
மண்தனில் ஓடி வழிந்தது
திண்ணைகள் பண்ணைகள் அழிந்தது
எண்ணங்கள் இன்னமும் ஈரம்!
தாய்நாடு வெகு தூரம்
வாய்தனில் ஊறுது காரம்
விழிதனை நிறைக்குது ஈரம்!
மண்தனை இழந்தது பாரம்
கண்களால் கண்டது கோரம்
எண்ணங்கள் காயாத ஈரம்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan