புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித் தலைப்பு
ஆறு மனமே ஆறு
*********************
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: ஏழு மாச்சீர்கள்
_____________
சேறு சகதி சேர்ந்த வாழ்வு
செத்து மடியும் வரையில்
நீறு பூத்த நெருப்பில் வெந்து
நித்தம் கலங்க வேண்டாம்
கூறும் அடியார் குறைகள் தீர்க்கும்
குமரன் துணையைக் கொண்டு
நாறு கின்ற நந்த வனம்போல்
நல்ல வாழ்வை அமைப்பாய்!
சீலம் பெரிது சிந்தை இருத்து
சிக்கல் தீர்க்கப் பார்ப்பாய்
ஓலம் வேண்டாம் ஓட்டு வாழ்வை
ஒடிந்து போதல் தகுமோ
பாலம் அமைத்துப் பதியை நாடு
பார்ப்பாய் ஒருநாள் விடிவு
காலம் ஒருநாள் கனிந்து வருமே
கவலை வேண்டாம் உனக்கு!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading