புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பகலவன்
***********
நெருப்புப் பிழம்பாய்த் தோன்றிடுவான்
இருளின் ஒளியாய் உதித்திடுவான்
விடியலின் பிறப்பாய் இருந்திடுவான்
அடிவானம் ரசிக்கவும் வைத்திடுவான்
நுனிப்புல்லில் இருக்கும் திவலைப்
பனித்துளி மறைந்திடும்
அவன் வரவால்
சூரிய காந்தியின் தலைவன் அவனே
பாரினில் பகலது மிளிர்ந்திடுமே!
கிழமைப் பெயர்களில் ஒன்றானான்(ஞாயிறு)
உழவுத் தொழிலாளர் தோழனானான்
வளங்கள் பெருக வந்திடுவான்
களனி செழிக்கும் அவனாலே!
அடர்நிறைக் காட்டினில் வெம்மை
படர்ந்திடக் காட்டுத்தீக் காரணனே
இன்னலும் தருகிறாய் இடைக்கிடை
பாலைவனத்தினில்
மாழும் உயிர்களும்
சோலைவனத்தினில் செழிக்கும் மலர்களும்
உந்தன் விந்தை சொல்லுமன்றோ!
பகலவன் ஒளி பட்டால்
சுகமது கிட்டும் என்றே
குழந்தைகளைப் பாயில் கிடத்தும்
வழக்கம் கொண்டனர் நம்முன்னோர்
பகலவனே! உனக்குப் படையலும் செய்தே
மனத்தினால் நன்றியும் கூறுவரே
உன்னை நம்பி இருப்பது பயிர்கள் மட்டுமல்ல
எங்கள் உயிரும்தான்
பகலவனே!
நீ தகிக்கச் செய்தாலும்
அகமதிலே வணங்குகிறேன் உன்னை!
நன்றி !

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading