” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சாதனைப்பகிர்வும் சரித்திரச்சுவடும்

இரா விஜயகௌரி

சரித்திரச் சுவட்டினை
தினமும் பதித்தான்-இவன்
சமர்களை நாளும் வாழ்வாய்
வழியாய் பாதை தொடுத்தே எழுந்தவன்

போராட்டமும் போட்டியும் -இவன்
குரல்வளை நசுக்கிட- நாளும்
புதிதாம் படைப்பினை விதைப்பாய்
நம்பிக்கைத் தொடுப்பாய் தொடுத்தவன்

தமிழின் இழைதனில் இழைய
இளைய தலைமுறை வடத்தினை வலிந்து
வளைந்து இயைந்து இசைந்து
இயல்பாய் வளமாய் வாழ்வாய். கலந்தவன்

உயிர் மூச்சின் ஆளுமை உராய்ந்து செப்பி
முயன்றே எழுந்திடமுழுக்கரம் கொடுத்தவன்
அழகிய மலர்களின் அணைப்பின் தந்தை
இதயம் கலந்துஇயல்புற உயர்த்தினான்

பகட்டே இல்லா பாமுகத்தந்தை
பழகிச் செலுத்திடும் பவ்யமாம் குழந்தை
பாவலன் பாரதி செல்லம்மா போலொரு
வாணி மகள் இவனது வலக்கரம் கலந்தாள்

இராகவி மகளாள்இன்முகம் கலக்க
சாதனைப்பகிர்வு. சரித்திரம் தொட்டது
உயர்ந்தவர் பலரின் உன்னத மகிழ்வினில்
உயர்வுள்ளல்கொண்டன்ன் எங்கள் ஆளுமை

Nada Mohan
Author: Nada Mohan