சாளரத்தின் ஒளியினிலே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.09.24
ஆக்கம் 330
சாளரத்தின் ஒளியினிலே

ஓலைக் குடிசையிலே
காலை வேளையிலே
சிவந்த அடிவானத்திலே
குவிந்த ஒளிக்கற்றை
சாளரத்தினூடே பதிந்த
ஒளிச் சிதறல்கள்

நித்திரையின்றிப் புரண்ட கண்ணில்
பட்டுத் தெறித்த அன்றைய நினைவுக்
கீறல்கள் மனதில் இன்றும் புதைந்த
உயிரூட்டங்கள்

தாங்கொணாத் துயரம்
தாகந்தீராக் கனவுகள்
சோகந்தரும் பணப்
பற்றாக் குறைகள்

சூரிய பகவானின் கருணை பயிரில்
பாரிய விளைச்சல்
உச்சந் தொட சோர்ந்த
முகம் மலரக் கண்ட
சாளரத்தின் ஒளியினிலே
அந்தப் பசுமையான
வாழ்வோட்டங்களே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading