நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.09.24
ஆக்கம் 330
சாளரத்தின் ஒளியினிலே

ஓலைக் குடிசையிலே
காலை வேளையிலே
சிவந்த அடிவானத்திலே
குவிந்த ஒளிக்கற்றை
சாளரத்தினூடே பதிந்த
ஒளிச் சிதறல்கள்

நித்திரையின்றிப் புரண்ட கண்ணில்
பட்டுத் தெறித்த அன்றைய நினைவுக்
கீறல்கள் மனதில் இன்றும் புதைந்த
உயிரூட்டங்கள்

தாங்கொணாத் துயரம்
தாகந்தீராக் கனவுகள்
சோகந்தரும் பணப்
பற்றாக் குறைகள்

சூரிய பகவானின் கருணை பயிரில்
பாரிய விளைச்சல்
உச்சந் தொட சோர்ந்த
முகம் மலரக் கண்ட
சாளரத்தின் ஒளியினிலே
அந்தப் பசுமையான
வாழ்வோட்டங்களே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan