சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சிவதர்சனிஇரா

வியாழன் கவி 2259!!

மனிதம் மறந்தவை..

இருப்பாகிக் கிடந்த
பற்பல பண்புகள்
பறந்தே தான் போயின
பண்பட்ட உலகினில்
புண்பட்ட மனத்தை
புரையோடிப்போன வலியை
ஆற்றிட முடியா ஆங்காங்கு..

வாயில்லா சீவன்களும்
வார்த்தை இல்லா திங்கே
உணர்வினில் ஒன்றித்தே
தந்திடும் பாசமதனை
பட்டொளி வீசி எங்கும்
காண்கிறோம் மறுப்பென்ன
ஏமாற்றமும் ஏமாளித்தனமும்
கண்பட்டுப் போனது மனிதரில்
கற்பூரமாய்ப் பற்றினவே..

வற்றிப் போன வடிகால்
விழியெனும் ஆறு குளம்
ஊரெல்லாம் நீரில் மூழ்க
இதுவே துயருண்ட மனம்
எப்படி இலக்கணம் காண
காண்பதை கடந்து போவதை
காரியம் ஆற்றுவதை
ஏற்றே நகரும் நவீன வாழ்க்கை..
சிவதர்சனி இராகவன்
18/12/2025

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading