10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1816!
பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும்!!
தமிழர் பண்பாட்டின்
பேராலயம் எரியூட்டி
ஆண்டுகள் நாபத்துடன்
இரண்டு
நயமாய்க் கடந்தும்
நம் மனங்களில்
அதன் வடுக்கள் இன்னும்
தங்கியே விட்டது!!
தென்கிழக்காசியாவின்
பெரும் நூல் அகம்
அக்கினிக்குள் சங்கமம் காண
அக்கினிக் குஞ்சுகளாய் அவை
மீண்டெழுந்தும்
மூலம் எரிக்கப்பட்டது
பெரும் துரோகமே!!
அறிவின் இருப்பிடம்
பண்பாட்டின் மையம்
பலர் முயற்சியின் தேட்டம்
பேரினவாத அரக்கத்
தனத்தால் அழிந்தது
ஆற்றொணாத் துயரம்
துரோகத்தின் சாட்சியம்!!
புதுப் பொலிவுடன்
அன்னைத் தமிழாய்
மீள எழுந்து நிற்கும்
நூலகத் தாய் ஆக்குவாள்
இன்னும்
ஆற்றலுடை மாந்தரை
கூட்டுவாள் தமிழர்
பண்பாட்டின் வேர்களை
வீழ்வது நியதியானாலும்
எழுந்து நிற்பது நீதி
என்பதைப் பறை சாற்றி”!!
சிவதர்சனி இராகவன்
24/5/2023

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...