06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1816!
பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும்!!
தமிழர் பண்பாட்டின்
பேராலயம் எரியூட்டி
ஆண்டுகள் நாபத்துடன்
இரண்டு
நயமாய்க் கடந்தும்
நம் மனங்களில்
அதன் வடுக்கள் இன்னும்
தங்கியே விட்டது!!
தென்கிழக்காசியாவின்
பெரும் நூல் அகம்
அக்கினிக்குள் சங்கமம் காண
அக்கினிக் குஞ்சுகளாய் அவை
மீண்டெழுந்தும்
மூலம் எரிக்கப்பட்டது
பெரும் துரோகமே!!
அறிவின் இருப்பிடம்
பண்பாட்டின் மையம்
பலர் முயற்சியின் தேட்டம்
பேரினவாத அரக்கத்
தனத்தால் அழிந்தது
ஆற்றொணாத் துயரம்
துரோகத்தின் சாட்சியம்!!
புதுப் பொலிவுடன்
அன்னைத் தமிழாய்
மீள எழுந்து நிற்கும்
நூலகத் தாய் ஆக்குவாள்
இன்னும்
ஆற்றலுடை மாந்தரை
கூட்டுவாள் தமிழர்
பண்பாட்டின் வேர்களை
வீழ்வது நியதியானாலும்
எழுந்து நிற்பது நீதி
என்பதைப் பறை சாற்றி”!!
சிவதர்சனி இராகவன்
24/5/2023
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...