மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1866!

நல்லை நகரில் விழாக்கோலம்..!

ஆண்டுக்கு ஒருமுறையாய்
அழகாய் விழாக்கோலம்
நல்லைக் கந்தன் எழுந்தருளும்
இரதத்தின் உலாக்காலம்
ஆழியென அலைகடலென
ஆர்ப்பரிக்கும் பக்தர் கூட்டம்
அருள் மழையில் நனைந்தேகும்..!

சீர்பூத்த ஈழத்தில்
பேர் பொறித்த ஆலயம்
அன்று தலை நகராய் மிளிர்ந்த
வரலாற்றின் சான்றாதாரம்
தாய்மொழி அரசோச்சிய
அரியணை நல்லூராய் நின்று
ஆல்போல் வேரூன்றிய
பண்பாட்டின் மூலாதாரம்…!

ஏழை பணக்காரர் பேதமை
எள்ளளவும் இன்றியதோர்
ஏற்றத் தாழ்வற்ற பண்பும்
வீற்றிருக்கும் கந்தன் வீதியில்
எங்கள் ஈகையாளன் பார்த் தீபன்
நினைவெழும் புனித நாள்
வீழ்ந்திடும் பகைமையில்
வீழாதெழும் பண்பாடும் ஈகையும்..!
சிவதர்சனி இராகவன்
13/9/2023

Nada Mohan
Author: Nada Mohan