தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1874!

இறக்கைகளின் விசையிலே!

இயங்கும் நிலை இழந்து
அப்பப்போ தவிக்கும் நிலை
இறக்கை விரிக்கும் பறவை
தன்னைப் பார்த்துப் பொறாமை
இறைவன் கொடையில் ஏதோ
வஞ்சக நிலைமை – இதுவே
இருப்பதை விடுத்துப் பறப்பின்
பேராசை அது நிராசை நிலை…!

யாருக்கு எதைக் கொடுப்பது
இயற்கை வகுத்த நியதி
பேருக்கும் புகழுக்கும் ஓடுவது
மனித வாழ்வின் ஒரு பகுதி
கிடைப்பது எதுவாயினும்
ஏற்பது இவள் வெகுமதி
கிணற்றுத்தவளை வாழ்வில்
எதுவுமில்லை பெறுமதி
எதற்கும் அஞ்சாதே மனமே
வாழ்ந்துவிட வேண்டும் உறுதிமொழி!
சிவதர்சனி இராகவன்
28/9/2023

Nada Mohan
Author: Nada Mohan