சிவரஞ்சினி கலைச்செல்வன்

நினைவு நாள் சிவரஞ்சினி கலைச்செல்வன். காதல் கனியும் பருவத்தில்
கனவுக் கோட்டை இதயத்தில்
மோகன கனவு மனதுக்குள்
முளைக்கும் இளமை பருவத்தில்
நேயம் தமிழ் மீது உந்த
நெஞ்சில் வைரம் நிமிர்ந்தாட
தாகம் தமிழ் மண் விடுதலையில்
தண்ணீர் தேட சமர் களத்தில்
சாதல் கூடும் என்றறிந்தும்
சாதிப்பதுவே குறியாக
மோதும் யுத்த முனையினிலே
முனைப்பு எதிர்பை முறிப்பதுவே
ஏதும் கேட்டு கேள்வியின்றி
எட்டும் கட்டளை நிறைவேற்ற
சாவை அணைத்த வீரர்களே
சரித்திர மானீர் சாதனையே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading