சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வேள்வி
முன்னொருகாலம்
முனிவர்கள் அரசர்
மூட்டினர் யாகம்
வேள்வி ஓமம்
புகை கக்க
அப் புகை
நாட்டு மக்கட கு
நலன்களை செயதது
வேள்விக்கு பலி கொடித்தல்
அக்கால வழக்கம்
நாகரீகம் வளர
பலி மிருகங்களை
தானம் கொடுத்தல்
நிகழவென ஆனது
அதர்வ வேதம்
பலியிடல்
பெல்லி,சூனியம்
எல்லாம் ஏற்றது
காபால சமயம்
காவல்தெய்வம்
வைரவருக்கு
பூசை பலியை
வேள்வியாய்
வகுத்தது
கொன்ற பாவம்
தின்னால் தீரும்
என்பது உலகம்
ஏற்றதும் ஒரு சமயம்
மாட்டை வழுத்தி
மடக்கி ஒதி
அறுத்து உண் என்னும்
இன்னொரு சமயம்
அவரவர் சமயம்
அவரவர் பக்தி
இடையில் நுழைவது
என்ன நியாயம்?
சிவரஞ்சினி கலைச்செல்வி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading