மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

பேதையவள் என் செய்வாள்
<<<<>>>>>><<<<

நாட்டம் கொண்டாளவள் நாணலாய் வளைந்தாள்

பாட்டொன்று பாடினாள் _ அவள்
பரவசமாய் தானிருந்தாள்

முத்துப் பல்லழகியென்பார்
பத்திரை மாற்றுத் தங்கமென்பார்

கண்டபடி பேசமாட்டாள்_
அவள் கடும் கோபக்காரி யென்பார்

வித்தாரமும் வேடிக்கையும் விருப்பமில்லாக் கேளிக்கை என்பாள்

சுத்து மாற்று இல்லாமல் __என்றும் சுதந்திரமாக
வாழ வேண்டும் என்பாள்
வாட்டம் கொண்டாள் _
அவள் வாடிவதங்கி நின்றாள் _ வெளி
நாட்டு மோகத்தினால் __ அவள் நட்டாற்றில் விடவும் பட்டாள்

பேசிவைத்த திருமணமோ __ ஒரு
பேச்சறியா மூடனவன்
போதைக்குள்ளே அவன்
இருந்தான்
பேதையவள் என்செய்வாள்

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading