26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சிவரூபன் சர்வேஸ்வரி.
மீட்டு வைக்க யார் வருவார்?
கடலலையடித்து திரையது பொங்க
மடல் கழன்று ,தாள் மண்ணில் விழவும்
திடலழித்து தோட்டமாக்கி
படல் போட்டு பாவற்கொடியும் வைத்து
களனி கங்கை வற்றி நிற்க
காசினியில் வெயில் உச்சம் கொள்ள
பானையில் சோறு இன்றியகப்பை தாளமிட
படரும் துன்பத்தில் மலையகம் வாடி நிற்க
நிலையும் மாறிப் போய் விடாதா
களையும் எடுக்க முடியாத நிலையோ
தேயிலைக்கன்றுகள் கருகி நின்றால்
தேசம் மகிழ வாழ்வதெங்கே
பாவம் பார்த்து தருவார் யாரோ
காலம் பார்த்து மீட்பார் யாரோ
வாழும் காலம் சோரும் நிலையோ
தேடும் நேரம் இனி எப்பவருமோ
மழை வீழ்ச்சியோ மண்ணில் இல்லை
மாணிலமும் இங்கே செழிக்கவில்லை
மீட்சியென்பது எமக்கும் இல்லை
மீட்டு வைக்க யார் வருவாரோ..!?
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...