புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி.

மீட்டு வைக்க யார் வருவார்?

கடலலையடித்து திரையது பொங்க
மடல் கழன்று ,தாள் மண்ணில் விழவும்
திடலழித்து தோட்டமாக்கி
படல் போட்டு பாவற்கொடியும் வைத்து

களனி கங்கை வற்றி நிற்க
காசினியில் வெயில் உச்சம் கொள்ள
பானையில் சோறு இன்றியகப்பை தாளமிட
படரும் துன்பத்தில் மலையகம் வாடி நிற்க

நிலையும் மாறிப் போய் விடாதா
களையும் எடுக்க முடியாத நிலையோ
தேயிலைக்கன்றுகள் கருகி நின்றால்
தேசம் மகிழ வாழ்வதெங்கே

பாவம் பார்த்து தருவார் யாரோ
காலம் பார்த்து மீட்பார் யாரோ
வாழும் காலம் சோரும் நிலையோ
தேடும் நேரம் இனி எப்பவருமோ

மழை வீழ்ச்சியோ மண்ணில் இல்லை
மாணிலமும் இங்கே செழிக்கவில்லை
மீட்சியென்பது எமக்கும் இல்லை
மீட்டு வைக்க யார் வருவாரோ..!?

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading