மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

ஆறு மனமே !
*****************************

அரியாசனமேறித் தானிருந்தாலும்.
அறுசுவையுணவை உண்டிருந்தாலும்.
ஆகாயவானில் பறந்திருந்தாலும்.
ஆறாதரணமொன்று வந்திடுமே.

சுகபோகவாழ்வில் மூழ்கினாலும்.
சுகந்தக் காற்றை நுகர்ந்திடலாம்.
சோலைக் குயில் போல் பாடிடலாம்.
சோககீதமொன்று
வந்திடுமே.

ஆறு அறிவை இறைவன்த தந்திருந்தாலும்
ஆனந்தவாழ்வில் மூழ்கியிருந்தாலும்
அடுத்துக் கெடுக்கும் மனிதர் கூட்டம்.
ஆற முடியாமல் தணலாக்கி விடுவார்.

நீதி வழுவாத நெறியில் நின்றும்
நீங்காத வடுவைத் தந்து நிற்பார்.
நாதியற்றவர் நாமில்லை யென்றாலும்
ஏனோ மனமும் ஆறாமல் துடிக்கும்.
ஆறு மனமே ஆறு என்று -அந்த
ஆண்டவனை நாடுவதே மனம்.

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி✍️✍️✍️✍️✍️✍️✍️✨️✨️✨️

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading