சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பெற்றவரே உலகமாதா
பேர் விளங்க வைக்கும் குலமாதா
கற்றவரும், நற்றவரும், மற்றவரும்
போற்றி நிற்க
கருவறையில் நமைச்சு சுமந்த
கருணை மாதா

அமுத முலை தான்னூட்டி
அன்புடன் சீராட்டி
அறப்மோங்க நடைபயில
பெற்றவரே வழிகாட்டி
கல்வியெனும் படகேறி
காலமதில் வென்று வர
கடமையுடன் விழித்து நிற்கும்
பெற்றவரே தெய்வமப்பா

சான்றோராய் நாம் மிளிர -அவர்
சகிப்பது எத்தனையோ
சோதனைகள் பல கோடி சுமந்து நின்று
நம்மை சாதிக்க வைப்பதற்கு
தம் வேதனையை தாம் மறந்து

வெற்றி நடை தான் போட்டு தட்டியெமைக் கொடுப்பார்
வட்டில் சோறு தான் மறப்பார்
வாரி எமைத்தான் அணைப்பார்
முத்த மழை பொழியும்,
பெற்றவரே தெய்வம்

Nada Mohan
Author: Nada Mohan