“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_175

“சிறுமை கண்டு பொங்குவாய்”
புத்தம் புதிய
ஆண்டு புதிதாய் மலர்ந்தது
புதுமைகள்
பிறந்திட
சிறுமைகள் விலகிட
பெருமைகள்
பொங்கிட!

தாய் தந்தையை மதிக்காது
சேய்யை மிதிப்பது
செய்நன்றி கடனை மனதில் புதைப்பதும்!

அதிர்ச்சியாம் அதில் உயர்ச்சியாயாம்
உச்சம் பெற்ற ஊஞ்சலாட்டம் ஊரெல்லாம்
தேரோட்டம்!

பள்ளி செல்லும் சிறுமி
பாதகர் செயலுக்கு நடுங்கி
பள்ளி தோழிகள் இணைந்து
பள்ளி செல்ல முடியல்லயே
பாதகர் செயல் கண்டு பொங்குது மனது
ஏங்குது இளசு!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
18.01.24

Nada Mohan
Author: Nada Mohan