கனவுப் பயணம் 761 07.05.2026

செல்வி நித்தியானந்தன் கனவுப் பயணம் அகமதில் நிறைவு கண்டு ஆனந்தமாய் சுற்றி வந்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து ஆச்சரிய பயணமாய் நிறைவு நாளும் வாரமும் மாதமாகி நல்லவை கெட்டவை சேர்வாகி நானும்துணையோடு இணைவாகி நல்பொழுதுவிடியலும்...

Continue reading

அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_151

“பாமுகம் வாழி”
லண்டன் தமிழ் வானொலியே
காற்றில் கலந்தாய்
காதோரம் செய்தி சொன்னாய்
பரிணாம வளர்ச்சி கண்டாய்!

முதல் ஒலியாய்
முத்தமிழாய்
முன் நகர்ந்தாய்
முதல் மேடை நாம் கண்டது
செங்காளன்
2004
வான்பரப்பில் பறந்து
வானொலியாய் நின்று!

மழலையை
மகிழ்வித்தாய்
இளையவரை ஊக்குவித்தாய்
பெற்றோருக்கும்
உற்றவர்களுக்கும்
ஊன்று கோலாய் ஊர்ந்து சென்றாய்!

எழுதிதால் உயர்ந்தோம்
ஏற்றங்கள் கண்டோம்!

மழலை இளைய தலைமுறை
பெற்றவர் எம்மை
தொழில் நுட்பகருவியை கையாழவும்
மெய்யாழவும்
கற்றுத் தந்தாய்
கற்றதும் பெற்றதும் தான் அதிகம்!

பாமுகமாய்
பரிணமித்தாய் பார்ரெங்கும்
ஆளில்லாத விமானமாய்
ஆடல் பாடல் போடுகின்றாய்
இணைய வலைதளமாய் இயங்குகின்றாய்!

நீ வாழி
உன் புகழ் வாழி
உன்னை மிஞ்ச யாரும் இல்லை
உனக்கு இணை ஏதும்
இல்லை!

அற்புதமான மனிதன் நீ
ஊற்றெடுக்கும் அருவி நீ
நதி போல் ஓடுகின்றாய்
துணைவி தூணாக நின்று உயர்ந்தவன் நீ
தத்துவ ஞானி
நித்திய சிலி
சிரித்தபடி அரவணைப்பவளும் நீ!

நீ நீடுடி வாழ்க
நின் புகழ் நித்தமும் ஓங்க!
நீ வாழி
நின் புகழ் வாழி!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
08.06.24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading