செவிலியர் திலகம்…

ரஜனி அன்ரன் (B.A) செவிலியர் திலகம்.......13.08.2026 செல்வச்செழிப்பினில் இத்தாலியில் பிறந்து சிற்றின்பவாழ்வினை அறவேதுறந்து செவிலியர்பணிக்கு தன்னையே அர்ப்பணித்து துன்பக்கடலில்...

Continue reading

பா முக உறவுகளின் சங்கமம்

செல்வி நித்தியானந்தன் பா முக உறவுகளின் சங்கமம் பாமுக உறவுகளின் பலம் பார்த்தும் கேட்டதுமே நலம் பரவசமாய் ஆனது மனம் பல்இனம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_151

“பாமுகம் வாழி”
லண்டன் தமிழ் வானொலியே
காற்றில் கலந்தாய்
காதோரம் செய்தி சொன்னாய்
பரிணாம வளர்ச்சி கண்டாய்!

முதல் ஒலியாய்
முத்தமிழாய்
முன் நகர்ந்தாய்
முதல் மேடை நாம் கண்டது
செங்காளன்
2004
வான்பரப்பில் பறந்து
வானொலியாய் நின்று!

மழலையை
மகிழ்வித்தாய்
இளையவரை ஊக்குவித்தாய்
பெற்றோருக்கும்
உற்றவர்களுக்கும்
ஊன்று கோலாய் ஊர்ந்து சென்றாய்!

எழுதிதால் உயர்ந்தோம்
ஏற்றங்கள் கண்டோம்!

மழலை இளைய தலைமுறை
பெற்றவர் எம்மை
தொழில் நுட்பகருவியை கையாழவும்
மெய்யாழவும்
கற்றுத் தந்தாய்
கற்றதும் பெற்றதும் தான் அதிகம்!

பாமுகமாய்
பரிணமித்தாய் பார்ரெங்கும்
ஆளில்லாத விமானமாய்
ஆடல் பாடல் போடுகின்றாய்
இணைய வலைதளமாய் இயங்குகின்றாய்!

நீ வாழி
உன் புகழ் வாழி
உன்னை மிஞ்ச யாரும் இல்லை
உனக்கு இணை ஏதும்
இல்லை!

அற்புதமான மனிதன் நீ
ஊற்றெடுக்கும் அருவி நீ
நதி போல் ஓடுகின்றாய்
துணைவி தூணாக நின்று உயர்ந்தவன் நீ
தத்துவ ஞானி
நித்திய சிலி
சிரித்தபடி அரவணைப்பவளும் நீ!

நீ நீடுடி வாழ்க
நின் புகழ் நித்தமும் ஓங்க!
நீ வாழி
நின் புகழ் வாழி!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
08.06.24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading