“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 171.
“எதிர்ப்பு அலை ”

நானிலத்தில் நல்லதையே நாடி நிற்பார் நமனுக்கும் அஞ்சார்
நாடி நிற்கும் கொள்கைகளில் அணுவும் பிசகார்
இவர் காட்டும் எதிர்ப்பலைகள் என்றும்சோடை போனதில்லை
அந்நியர் தம் அடிமை விலங்கொடிக்க மகாத்மா காந்தி காட்டிய எதிர்ப்பலை
உண்மையும் நேர்மையும் அகிம்சையும் என்றும் வெல்லும் எனக்காட்டும் சத்திய சோதனை
நாலு பத்துக்கோடி மக்கள் அன்று காட்டிய ஒற்றுமை
இன்று நூறு பத்துக்கோடி மக்கள் சேர்ந்து பாடும் பாரத மாதாவின் பெரு வெற்றியை
உலகெங்கும் இன்று நோக்கின் ஆர்ப்பாட்டங்கள்
பொதுநோக்குப் போர்வையில் சுயலாபங்கருதும் போராட்டங்கள்
இலட்சியத்தின் வேட்கை உறுதியான கொள்கை என்றும்
வெற்றியின் கதவைத்தொட்ட சம்பவங்கள்
சரித்திரத்தின் பொற்பதிவாய் என்றும் வாழும் நிச்சயங்கள்
நேர்மை, கொள்கை, அடிபணியாமை இவை மூன்றும்
எதிர்ப்பலைகளின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகள்

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan