மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 206

*புதிர்ப் பொங்கல்*

புதிதாய் விளைந்த நெல்லெடுத்து புதிர்ப்பொங்கல் கொண்டாடுவோம்
பதிவாய் வரலாற்றில் இருந்தகாலம் தைப்பொங்கல் கொண்டாடினோம்
முற்றிவிளைந்த வயலில் கதிர் கொய்து பொங்கி மகிழ்ந்த ஒருகாலம்
கைவிட்ட வயல்வெளிகள் கட்டாந்தரையாய் காட்சியளிக்குதே இக்காலம்.

தமிழன் ஆனைகட்டிப் போரடித்த தொரு பொற்காலம்
செல்லும் வழியெங்கும் செந்நெல் தலைசாய்ந்து வரவேற்கும் அக்காலம்
தானும் உண்டு தானமுஞ்செய்த தன்னிறைவு இன்று மறந்த காலம்
தரங்கெட்ட அரிசியேனும் இறக்குமதிசெய்து இரந்துண்டு வாழும் இக்காலம்

நாட் காட்டியில் தைப்பொங்கல் நாள் பகட்டாய்ப்பளபளக்கும்
புதிதெடுத்துண்ணும் புதிர்ப்பொங்கல் அது என அறியாது வாய்யிளக்கும்
பழமை மறந்து புதுமை வேட்கையில் நாகரீக உச்சியில் நிற்கும் நாம்
பாழும் வயிறு மட்டுமே பசியை மறக்கவில்லை புதிர்பொங்கலையும் கேட்கவில்லை.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading