முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 261 ]
“பெருமை”

பெருமையை நாடினோர் சிறுமையை நாடிச்செல்லார்
பெருமையின் சிறப்பறியா புல்லரும் நம்மிலுள்ளார்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென்றார்
அவர்தம் செயல் வினையால் அன்றோபேதமடைகின்றார்

பிறர் செய்யயியலா செயல் செய்து பெருமையடைகின்றார்
பழம் பெரும் புலவரும் நீதிநெறி வகுத்தசான்றோரும்
மானிடப்பிறவி எய்தல் அரிதினும் அரிது என்றார்
மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமென்றார்

பிறவியின் நோக்கமறியாது வாழ்க்கையில் தாழ்வடைகின்றார்
கற்புடமை போற்றும் மாதர்க்கு என்றும் பெருமை
தற்காத்து தகைசான்ற ஆடவருக்கும் பெருமை
சொற்காத்து சோர்விலா உழைக்கும் பெண்ணுக்கும் பெருமை

பெற்றோர்க்கு நன்மக்களால்பெருமை மகனால் பெற்றவர்க்குப்பெருமை
இனமத மொழி கடந்து ஆற்றும் பொதுச்சேவைக்குப்பெருமை
சமூகச்சீரழிவை எதிர்த்துப்போராடுவோர்க்குப்பெருமை
செங்கோலாட்சி சிறப்புறஆற்றும் அரசுக்குப்பெருமையிலும் பெருமை.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading