செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் பாவையண்ணா!
பசுமை
“””””””
பசுமையெங்கும் பரந்திலங்கப் பாட்டாளி உழைத்திடுவான்
பசும்புற்கள் படர்நிலத்தில் பசுக்களெலாம்
பசிபோக்கும்
விசும்பதனின் வீழ்துளியே வையகத்தை வாழவைக்கும்.
முசுட்டையுடன் முல்லையுமே முற்றத்தை அழகுசெய்யும்

பசுமைதரு சூழலினால் பசுமைபெறும் உயிர்களுமே
பசுமைதரும் உறவுகளின் பலத்தினிலே
இயங்கிடவே
பசுமரத்தின் ஆணியெனப் பலர்வந்து
போவார்கள்
பசுமையெனும் போர்வையது பாரெங்கும்
அழகியலாம்

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading