போரிடும் உலகமோ..!!

வியாழன் கவி 2307!!

போரிடும் உலகமோ..

பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள் வாய்
அகப்பட்ட உயிர்கள் நிலை எங்கே!!

வான் மீது வட்டமிடும் வல்லூறாய்
வாரிக் கொட்டும் குண்டுமழை
வான் முட்டும் கட்டடங்கள்
மண்ணை வந்தே முத்தமிடுதே..

கருகிப் போகும் குருத்துகளாய்
இளம் தலைமுறையும் வாட
குருதி மழை பொழியுதெங்கும்
குற்றங்களே நிறையுதெங்கும்

வான் வழி போக்கிவரத்து
வழிகள் அடைபட்டுப் போக
அங்கும் இங்குமாய் உறவுகள்
அல்லலில் தவித்தல் மாறாதோ
சிவதர்சனி இரா
19/3/2026

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading