போரிடும் உலகமோ..!!

வியாழன் கவி 2307!!

போரிடும் உலகமோ..

பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள் வாய்
அகப்பட்ட உயிர்கள் நிலை எங்கே!!

வான் மீது வட்டமிடும் வல்லூறாய்
வாரிக் கொட்டும் குண்டுமழை
வான் முட்டும் கட்டடங்கள்
மண்ணை வந்தே முத்தமிடுதே..

கருகிப் போகும் குருத்துகளாய்
இளம் தலைமுறையும் வாட
குருதி மழை பொழியுதெங்கும்
குற்றங்களே நிறையுதெங்கும்

வான் வழி போக்கிவரத்து
வழிகள் அடைபட்டுப் போக
அங்கும் இங்குமாய் உறவுகள்
அல்லலில் தவித்தல் மாறாதோ
சிவதர்சனி இரா
19/3/2026

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading