மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

நிர்மூலம்

ஊரோடு ஓடிய
அவலம்
வேரோடு அழித்த
கோலம்
சீர்ரொடு வாழ்ந்த
பந்தம்
சின்னா பின்னாய்
சொந்தம்

விரும்பி உறவுகள்
காத்து
விழிமூடா வலிகளை
சுமந்து
வானமும் மழையாய்
பொழிந்து
மண்ணும் நிர்மூலம்
ஆனது

கொத்தாய் உயிரும்
அழிப்பு
கொலையாய் இதயத்
துடிப்பு
குருதியில் உடலும்
சிதைப்பு
இறுதியாய் ஆட்சி
அறிவிப்பு

கட்டிய கல்லறைகள்
மாயம்
களவாணிகள் செயலால்
காயம்
சிங்களம் மறந்ததா
நேயம்
சீற்றத்தால் அழித்த
நிர்மூலம்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan