பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மலைப்பு

அந்தரத்தில் நின்று சுற்றுகின்றது பார்
இந்த சம்பவத்தை நடத்தியவர் யார்
உயிரினங்களை உருவாக்கி கவனிக்கின்றார் தந்தையாக
புரிந்துவிடா அளவிற்கு இருக்கின்றார் விந்தையாக

அற்புதங்களை அடுக்கடுக்காய் நிகழ்த்துகின்ற புனிதர்
கற்சிலையாய் வடித்தவரை வணங்குகின்றார் மனிதர்
இற்றைவரை காட்சி அளித்ததில்லை உருவமாக
உற்பத்தியாய் உண்டுபண்ணி இருக்கின்றார் அருவமாக

அறிவிற்கு அப்பாற்பட்ட அதிசய சக்தி
அறியமுடியாது திண்டாடுகின்றது மனித புத்தி
சின்னச்சின்ன அணுக்களுக்குள்ளும் அழகாக வீற்றிருக்கின்றார்
கண்ணுக்குத் தெரியாதிருந்து நன்மைகளை புரிகின்றார்

எவரெவர்க்கு எது தேவை எப்பொழுது
அவரவர்க்கு அள்ளியே வழங்கிடுவார் அப்பொழுது
வாழ்க்கையின் திரைக்குப் பின்னால் செயற்படுகின்றார்
கேள்விக்கு விடைகாணா புதிராக இருக்கின்றார்

ஜெயம்
12-09-2023

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading