ஜெயம் தங்கராஜா

சசிச

மலைப்பு

அந்தரத்தில் நின்று சுற்றுகின்றது பார்
இந்த சம்பவத்தை நடத்தியவர் யார்
உயிரினங்களை உருவாக்கி கவனிக்கின்றார் தந்தையாக
புரிந்துவிடா அளவிற்கு இருக்கின்றார் விந்தையாக

அற்புதங்களை அடுக்கடுக்காய் நிகழ்த்துகின்ற புனிதர்
கற்சிலையாய் வடித்தவரை வணங்குகின்றார் மனிதர்
இற்றைவரை காட்சி அளித்ததில்லை உருவமாக
உற்பத்தியாய் உண்டுபண்ணி இருக்கின்றார் அருவமாக

அறிவிற்கு அப்பாற்பட்ட அதிசய சக்தி
அறியமுடியாது திண்டாடுகின்றது மனித புத்தி
சின்னச்சின்ன அணுக்களுக்குள்ளும் அழகாக வீற்றிருக்கின்றார்
கண்ணுக்குத் தெரியாதிருந்து நன்மைகளை புரிகின்றார்

எவரெவர்க்கு எது தேவை எப்பொழுது
அவரவர்க்கு அள்ளியே வழங்கிடுவார் அப்பொழுது
வாழ்க்கையின் திரைக்குப் பின்னால் செயற்படுகின்றார்
கேள்விக்கு விடைகாணா புதிராக இருக்கின்றார்

ஜெயம்
12-09-2023

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading