தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மலைப்பு

அந்தரத்தில் நின்று சுற்றுகின்றது பார்
இந்த சம்பவத்தை நடத்தியவர் யார்
உயிரினங்களை உருவாக்கி கவனிக்கின்றார் தந்தையாக
புரிந்துவிடா அளவிற்கு இருக்கின்றார் விந்தையாக

அற்புதங்களை அடுக்கடுக்காய் நிகழ்த்துகின்ற புனிதர்
கற்சிலையாய் வடித்தவரை வணங்குகின்றார் மனிதர்
இற்றைவரை காட்சி அளித்ததில்லை உருவமாக
உற்பத்தியாய் உண்டுபண்ணி இருக்கின்றார் அருவமாக

அறிவிற்கு அப்பாற்பட்ட அதிசய சக்தி
அறியமுடியாது திண்டாடுகின்றது மனித புத்தி
சின்னச்சின்ன அணுக்களுக்குள்ளும் அழகாக வீற்றிருக்கின்றார்
கண்ணுக்குத் தெரியாதிருந்து நன்மைகளை புரிகின்றார்

எவரெவர்க்கு எது தேவை எப்பொழுது
அவரவர்க்கு அள்ளியே வழங்கிடுவார் அப்பொழுது
வாழ்க்கையின் திரைக்குப் பின்னால் செயற்படுகின்றார்
கேள்விக்கு விடைகாணா புதிராக இருக்கின்றார்

ஜெயம்
12-09-2023

Nada Mohan
Author: Nada Mohan