ஜெயம் தங்கராஜா

ச. சி.  ச.

குழல் ஓசை

அது குரலா இல்லை குழல் ஓசையா
புது வடிவில் மண்ணில் நுழைந்த பாஷையா
உள்ளம் உவகை தாங்காது உருகிக் கரைகிறது
கள்ளம் அறியாத உள்ளம் என்னத்தை உரைக்கின்றது

என்னவென்று செல்வேன் சிசுவின் அசைவுகள் ஆனந்தமே
கண்ணெதிரே ஜெக வாழ்வு சுகம் சிந்துமே
இன்னும் இன்னுமென்று மனம் ஒளியையும் முந்துமே
பின்னரும் கூட கனவிலும் வந்தது குந்துமே

குழந்தையின் செயல்களில் இன்பங்கள் கட்டுக்கடங்காமல் பீறிடும்
இழந்தவை எதுவுமில்லை என உணர்வது கூறிடும்
சின்ன உலகத்திற்குள் ஒன்றல்ல இரண்டல்ல அற்புதங்கள்
கன்னக் குழி வரையும் அழகான ஓவியங்கள்

துன்பங்களை கரைத்து விடும் எழில் சிரிப்பு
இன்பங்களை தந்துவிட கவலைகள் கட்டுக்கடங்காமல் மரிப்பு
இறைவனின் அருகாமையில் இருப்பது போன்றதெரு நிகழ்வு
தரை தீர்க்கும் வாழ்வினில் குழவியினால் மகிழ்வு

ஜெயம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading