புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவிஞன்

சின்னச்சின்ன அழகைக்கூட அவன் விழிகள் உள்வாங்கிவிட மறக்காது
தன் சிந்தனையை விரித்து சத்தான வார்த்தைகளை பொறுக்கி கிறுக்கி வரிகளாக்கிவிடுவான்
சொல் வித்தைக்காரன் தன் வார்த்தை விளையாட்டால் மனங்களை தன் இஸ்டத்திற்கு வசப்படுத்திவிடுவான்
தனிமை உலகுள் சஞ்சரித்து பல இனிமைத் கவிதைகளை சுகமாக பிரசவித்தும் விடுவான்

சமுதாயப் பழுதுகளை இவன் எழுதுகோல் உழுதுவிடும்
தன் தாய்மொழியை உயிராய் நேசிப்பவன் சுவாசிப்பவன் பூசிப்பவன் இவன்
வளைந்துகொடுக்காது நிமிர்ந்துநின்று வாய்மையை உச்சரிப்பவன்
தன் உணர்வுகளை மறைக்காது நன்கு உறைக்கவே உரக்கவே உரைப்பவன்

எவரும் காணமுடியாத அறியாவுலகை தன் கற்பனைகொண்டு கண்முன்னே படைப்பான் இவன்
என்றும் வாழும் வார்த்தைகள் தந்து நிரந்தரமானவன் என்றுமே அழியாதவன்
பகுத்தறிவை பறைசாற்றுவான் சமகாலங்களுள் ஆர்ப்பரிப்பான்
அழகான பொய் சொல்லிடினும்
மெய்களையும் ஒளிக்காது காட்சிப்படுத்துபவன்
சொற்களை செதுக்கிக்கோர்த்து சந்தங்களால் மொழியை அமுதாக்கும் கவிஞன் நல்ல கலைஞன்

ஜெயம்
18-04-2022

Nada Mohan
Author: Nada Mohan