புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 713

இப்போதெல்லாம்

இப்போதெல்லாம் உலகம் அடியோடு மாறிவிட்டது
அப்போதிருந்த நிலைமைகளின் எல்லைகளை மீறிவிட்டது
எந்திரமாகி கடிகாரத்துடன் போட்டிபோடும் சூழ்நிலை
விந்தையான உலகாகி இரவையும் பகலாக்கும் வாழ்நிலை

அந்தக்காலம் அது இயற்கையான வாழ்க்கை
இந்தக்காலம் செயற்கைக்குள் செருகிய வாழ்க்கை
பெற்ற மகிழ்ச்சிகளோ அன்று தாராளம்
வெற்று நிகழ்ச்சிகளாக இன்றோ ஏராளம்

குறைந்த வருமானத்தில் நிறைந்த நிம்மதியன்று
நிறைந்த வருமானத்தில் குறைந்தது நிம்மதியின்று
வீடுமுட்ட உறவுகளோடு கூடிக்களித்த காலமது
வீடுகள் பலவுண்டின்று தனிமையிலோடும் நாளுமது

பெரியவர் சொல்லைக்கேட்டு வளர்ந்ததெல்லாம் அப்போது
பெரிதாகவொன்றும் மூத்தோரை மதிப்பதில்லை இப்போது
முதுமையிலுமன்று சந்தோசங்களை அனுபவித்தது பழமை
புதுமையின் நடுவிலே தள்ளாடுதின்று இளமை

இறைவனை வணங்காத நேரமில்லை அப்போது
இறைவனை வணங்கவே நேரமில்லை இப்போது
உணவும் உறக்கமும் நேரத்திற்குநேரம் நிகழ்ந்ததன்று
பணமே வாழ்கையாகி பழக்கம் இடம்மாறியதின்று

சிரிப்பை மறந்து வெறிச்சோடிய வாழ்க்கை
சரியென்றே சரியில்லா கலியுகத்து வாழ்க்கை
இப்போதெல்லாம் மனிதர்கள் மாறிப்போன காலம்
எப்போதுமே கணனியினால் சிறைப்படும் கோலம்

29-02-2024

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading