பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

ச. சி. ச

நம்பிக்கை

தேடிப்பார் அந்ந வானமே வசமாகும்
ஓடிக்கொண்டிருந்தாலே வெற்றியும் ஒருநாள் நிஜமாகும்
கடந்து செல்கின்றது நமக்கான காலம்
கிடந்தால் சோம்பியே தாங்குமா ஞாலம்

துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு
இன்று மறுபடியும் புதிதாக பிறந்துவிடு
சோதனைகள் தாராளமாக வந்துவந்து போகும்
வேதனையிலும் கலங்காததே புத்திசாலிக்கு அழகாகும்

சாதிக்கப்பிறந்தவன் நீ அச்சத்தை தூக்கியெறி
மோதியுடைத்திடு தடைகளை கொள்வாயே வெறி
நம்பிக்கையின்மையை விழும் நிழலுக்குமில்லாமல் அகற்றிவிடு
நம்பியவர் கெட்டதில்லை வாழ்க்கையின் உச்சந்தொடு

எண்ணங்கள் எப்படியோ அப்படியே வாழ்நிலை
தன்னையே மீளமைக்க மாறிவிடும் சூழ்நிலை
உன்னையே நீயறிந்தால் நிலைமை சரியாகும்
மண்ணிலே உனக்கென சரித்திரம் உருவாகும்

ஜெயம்
19-02-2025

Nada Mohan
Author: Nada Mohan