இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

ச. சி. ச

நம்பிக்கை

தேடிப்பார் அந்ந வானமே வசமாகும்
ஓடிக்கொண்டிருந்தாலே வெற்றியும் ஒருநாள் நிஜமாகும்
கடந்து செல்கின்றது நமக்கான காலம்
கிடந்தால் சோம்பியே தாங்குமா ஞாலம்

துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு
இன்று மறுபடியும் புதிதாக பிறந்துவிடு
சோதனைகள் தாராளமாக வந்துவந்து போகும்
வேதனையிலும் கலங்காததே புத்திசாலிக்கு அழகாகும்

சாதிக்கப்பிறந்தவன் நீ அச்சத்தை தூக்கியெறி
மோதியுடைத்திடு தடைகளை கொள்வாயே வெறி
நம்பிக்கையின்மையை விழும் நிழலுக்குமில்லாமல் அகற்றிவிடு
நம்பியவர் கெட்டதில்லை வாழ்க்கையின் உச்சந்தொடு

எண்ணங்கள் எப்படியோ அப்படியே வாழ்நிலை
தன்னையே மீளமைக்க மாறிவிடும் சூழ்நிலை
உன்னையே நீயறிந்தால் நிலைமை சரியாகும்
மண்ணிலே உனக்கென சரித்திரம் உருவாகும்

ஜெயம்
19-02-2025

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading