” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

ச. சி. ச

நம்பிக்கை

தேடிப்பார் அந்ந வானமே வசமாகும்
ஓடிக்கொண்டிருந்தாலே வெற்றியும் ஒருநாள் நிஜமாகும்
கடந்து செல்கின்றது நமக்கான காலம்
கிடந்தால் சோம்பியே தாங்குமா ஞாலம்

துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு
இன்று மறுபடியும் புதிதாக பிறந்துவிடு
சோதனைகள் தாராளமாக வந்துவந்து போகும்
வேதனையிலும் கலங்காததே புத்திசாலிக்கு அழகாகும்

சாதிக்கப்பிறந்தவன் நீ அச்சத்தை தூக்கியெறி
மோதியுடைத்திடு தடைகளை கொள்வாயே வெறி
நம்பிக்கையின்மையை விழும் நிழலுக்குமில்லாமல் அகற்றிவிடு
நம்பியவர் கெட்டதில்லை வாழ்க்கையின் உச்சந்தொடு

எண்ணங்கள் எப்படியோ அப்படியே வாழ்நிலை
தன்னையே மீளமைக்க மாறிவிடும் சூழ்நிலை
உன்னையே நீயறிந்தால் நிலைமை சரியாகும்
மண்ணிலே உனக்கென சரித்திரம் உருவாகும்

ஜெயம்
19-02-2025

Nada Mohan
Author: Nada Mohan