ஜெயம் தங்கராஜா

ச.சி.ச

புத்தாண்டடே வாராயோ புத்துணர்வை தாராயோ

புத்தாண்டே வருவாயே புத்தம்புது வரவாக
சொந்தமென அள்ளித்தந்து சுகந்தரும் உறவாக
சத்தான வாழ்க்கையொன்றை தந்துதவி வரமாக
ரத்தினமாய் திகழாயோ சித்தமது இதமாக

பயணமொன்று புதிதாக அவனியிலே தொடங்கவே
பயனும் பலவாய்க் கூடியங்கு அடங்கவே
பயத்தைப் புதைத்து துணிவதுவும் அரும்பவே
தயவாயாண்டு வந்திடாதோ இதயம் விரும்பவே

உருண்டிடும் உலகதன் பகையதும் நீங்க
இருள்கொண்ட உள்ளத்துள் கருணையும் தேங்க
கருவுற்று செயலுக்குள் மனிதமும் ஓங்க
அருள்தரும் அகவையதும் மாற்றங்களைத் தாங்க

ஜெயம்
19 -12-2022
https://linksharing.samsungcloud.com/9UXBnjmQCvMY

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading