” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச

புத்தாண்டடே வாராயோ புத்துணர்வை தாராயோ

புத்தாண்டே வருவாயே புத்தம்புது வரவாக
சொந்தமென அள்ளித்தந்து சுகந்தரும் உறவாக
சத்தான வாழ்க்கையொன்றை தந்துதவி வரமாக
ரத்தினமாய் திகழாயோ சித்தமது இதமாக

பயணமொன்று புதிதாக அவனியிலே தொடங்கவே
பயனும் பலவாய்க் கூடியங்கு அடங்கவே
பயத்தைப் புதைத்து துணிவதுவும் அரும்பவே
தயவாயாண்டு வந்திடாதோ இதயம் விரும்பவே

உருண்டிடும் உலகதன் பகையதும் நீங்க
இருள்கொண்ட உள்ளத்துள் கருணையும் தேங்க
கருவுற்று செயலுக்குள் மனிதமும் ஓங்க
அருள்தரும் அகவையதும் மாற்றங்களைத் தாங்க

ஜெயம்
19 -12-2022
https://linksharing.samsungcloud.com/9UXBnjmQCvMY

Nada Mohan
Author: Nada Mohan