கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

புரியாத புதிர்

முன்னால் வாயார புகழ்ந்து பேசுவார்
பின்னால் போற்றிய வாயாலே ஏசுவார்
மண்ணகத்தில்  வாழுகின்றார் ஒருசிலர் இப்படியாக
இன்றுவரை புதிரென புரியமுடியாமலே அப்படியாக

நல்லவரா தீயவராவென முடியவில்லை புரிய
உள்ளத்தில் உள்ளவற்றை முடியவில்லை அறிய
சொல்லின்மேல் தேன்தடவி பேசுகின்ற சிலபேரும்
தள்ளிப்போய் காட்டுகின்றாரே உண்மைச் சுயரூபம்

இந்த வாழ்க்கையொரு மர்மமாகவே இங்கே
சொந்தமென கொண்டாடிவிட்டு திண்டாடவைப்பார் அங்கே
எந்த மனிதர் கைவிடுவார் எப்போது
அந்தநிலை  தெரியாது சத்தியமாய் இப்போது

புதிராக இறைவனையும் விதியையும் பார்த்தவர்
புதிதாக புரிந்துகொள்ளா மனிதரையும் சேர்த்தனர்
பதிலறியப்படாதவைகள் பெரும் புதிர்களாக மட்டுமே
வதிவிடத்து அறியாத வாழ்க்கை நட்டமே

ஜெயம்
17/01/2023

https://linksharing.samsungcloud.com/9MePCEbR8Gr4

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading