கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

இதுதான் தற்காலம்

ஏய்ப்பவன் ஊரை உல்லாசமாக வாழுகின்றான்
என்றும் பாவத்திற்கு பயந்ததில்லை
மாய்ந்து விட்டது மனித நேயம்
மனச்சாட்சியும் மரணமடைந்து விட்டது
வாய்மையை இறுக்கமாக கடைப்பிடித்த அரிச்சந்திரர்கள்
வாழ வழியின்றியே நடுத்தெருவில்
தேய்பவன் ஓடாய் பசியில் உழல்கின்றான்
தொடங்கிய இடத்திலே நிற்கின்றான்

நேர்மை என்பது பிரயோசனமற்ற ஒன்றாக
நடிப்பதே வாடிக்கையான நிகழ்வாக
யார் எவர் எப்படிப்பட்டவர் தெரியாது
யோக்கியனாக கசிந்து உருகுவார்கள்
பார்வையோ பணத்தின் மேலே இருக்கும்
பக்குவமாக வேண்டியதைக் கறப்பார்கள்
தேர்ச்சி பெற்ற சுயநல வியாபாரிகள்
தோற்றவர்கள் இங்கே பாமரர்கள்

ஒழுக்கக்கேடு என்பது அதிகாரத்தில் சகஜம்
ஓதுமே சாத்தானும் வேதம்
பழுதான குணத்தால் பாதைகள் மாறுகின்றன
பாழாய்ப் போகின்றது சமுதாயம்
சிலுவைப்பாட்டுடன் வறியவர் நாட்கள்
சதிகளை புரியாத கூட்டமாக
கழுவி இவர்கள் மூளையை இன்னும்
கோட்டையைக் கட்டுகின்றது ஆதிக்கம்

புரியாத புதிராகவே வாழ்க்கை பயணிக்கின்றது
பகட்டும் பணமும் ஆட்சியிலே
அறிவு அண்றாடங் காய்ச்சிகளிற்கு எட்டவில்லை
அடிமட்டத்தில் எங்கோ கோளாறு
குறிவைத்து பறிப்பவரோ பறித்துக்கொண்டே இருக்கின்றனர்
கெடுத்தபடி வாளும் வரை
தடுத்துவிடும் சட்டம் ஒன்று இல்லை
தடியெடுத்தவன் சண்டைக்காரன் இங்கே

இனிய பழக்கங்கள் வாழ்க்கையில் சுவாசமிழந்துவிட்டன
இனி வாழ்க்கை இப்படித்தான்
கனிந்து தானாய் விழ முன்பே
காயை பறித்தே சுவைத்திடுவார்
குனிகின்ற சமுதாயம் வேண்டியே குட்டை
காட்டாது வலியை இருக்குமட்டும்
துணிவார்கள் மனம் கரையா செருக்கர்கள்
தணியாது அவர்கள் தீமைகள்

ஜெயம்
04-04-2023

Nada Mohan
Author: Nada Mohan