தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

தங்கசாமி தவகுமார்

கவி : விடியலின் உன்னதம்
03.03.2022

கிழக்கு வெளிக்கும் உன்னதம் கண்டு
உள்ளத்தில் ஒரு படி உற்சாகம் மேவிடும்
நேற்றை பொழுதின் தடங்கல் கையினில்
இன்றைய பொழுதை திறம்பட நகர்த்த
விடியலின் கதிரொளி உன்னத ஊற்று
தூங்கிய புல்லினம் பூவினம் பட்சிகள்
இன்றுதான் பிறந்தோம் என்ற உன்னதம் விடியலில்
அரிதிலும் அரிய உயிர்ப்பிற்கு கதிரவன்
அவனே கருணைக்கு முதல்வன்
விடியலில் அவன் வடிவம் காண்பது
நம் வாழ்விற்கு மலர்வு
போட்டியும் புகழும் ஆதிக்க வெறியும்
நிறைந்த அரசியல் சந்தையில்
நாணயமும் நம்பிக்கையும் வெளிச்சமிட
மனிதம் பிறக்க இன்றைய விடியலும்
நாளைய விடியலும் வெளிச்சத்தை தரட்டும்!!!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading