இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி கைகட்டி வாய் பொத்தி வைத்ததெல்லாம் சட்டமென்று வரம்பினுள்ளே சிறைப்பறவை எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி ஆம் தாயகத்து வாழ்முறையில் விழி பேசும்...

Continue reading

தங்கசாமி தவகுமார்

கவி : விடியலின் உன்னதம்
03.03.2022

கிழக்கு வெளிக்கும் உன்னதம் கண்டு
உள்ளத்தில் ஒரு படி உற்சாகம் மேவிடும்
நேற்றை பொழுதின் தடங்கல் கையினில்
இன்றைய பொழுதை திறம்பட நகர்த்த
விடியலின் கதிரொளி உன்னத ஊற்று
தூங்கிய புல்லினம் பூவினம் பட்சிகள்
இன்றுதான் பிறந்தோம் என்ற உன்னதம் விடியலில்
அரிதிலும் அரிய உயிர்ப்பிற்கு கதிரவன்
அவனே கருணைக்கு முதல்வன்
விடியலில் அவன் வடிவம் காண்பது
நம் வாழ்விற்கு மலர்வு
போட்டியும் புகழும் ஆதிக்க வெறியும்
நிறைந்த அரசியல் சந்தையில்
நாணயமும் நம்பிக்கையும் வெளிச்சமிட
மனிதம் பிறக்க இன்றைய விடியலும்
நாளைய விடியலும் வெளிச்சத்தை தரட்டும்!!!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading