தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : நினைப்பு அது நெருப்பு

நிலா முற்ற கொட்டில்
குழை சாத கவளம்
கை முந்தி முழுங்கும்
தொண்டைக்குள் தாகம்

செலவில்லாத வரவு
தலை வருடி வளர்த்த
தாய் இன்று இல்லை அவர்
தலை முறையின் உயிர்ப்பு
உயர்ந்து நிற்கும் நிலை காண

உறவுகளின் சபையில்
ஓரமான இருப்பு
ஓரக்கண்ணில் கசிந்த
ஈரமான நெருப்பு

சூழலோடு நகர்ந்து
சுமந்து கொண்ட படிப்பு
இலட்சியத்தை தொட்டு நிற்கும்
இன்பமான வீடு!!!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading