தடமது படைத்தெழும் தனித்துவம்

சுமித்ரா தேவி (மித்திரா

கவிதை இலக்கம் 15
தலைப்பு தடமது படைத்தெழும் தனித்துவம்

திடமது தந்திடும் மனமதில்
கடமென ஒலித்திடும் இசையது
மடையென உடைத்தெழும்
நீர் நிலை-நம்
மனமது கழித்திடும் அன்பது
நிறமுடன் கற்றவை அறம் ஆவதும்
வரம் என பெற்றவர் வாழ்விலே-அவர்
தடமென விளைவதுதான்
உணர் கண்டதே
படமென விரிவதும்
பார் எமை அணைப்பதும்
தடமென படைத்தெழும் தனித்துவமே
சுமித்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading