தாயுமானவரே…..

வசந்தா ஜெகதீசன்
தந்தையென்னும் தைரியவாதி
தனித்துவம் பேணிடும் உறவாளி
எதற்கும் முதன்மை முதலீடாகும்
துணையாய் காக்கும் துணிவின்
தேர்ச்சி
பாசச் சிறகின் பண்பில் மிளிரும்
படிப்பினை ஊட்டியை பாதைச் செதுக்கும்
அன்பின் ஊற்றில் அவதாரம் தொனிக்கும்
எந்தை வாழ்வே எதற்கும் முதன்மை
தாயுமானவராய் தற்காக்கும்
பெருமை
வலிகள் நீக்கியே வழியைச் சுட்டும்
வரமாய் கிட்டிய தாயுமானவர்
அன்பின் ஆதாரம் அவனிக்கு அடையாளம்
முதலெழுத்தின் முத்திரையாய்
முதன்மை தந்த அன்புறவே
பேரன்பின் பெருவரம்!
பேறுகொள் தனித்துவம்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading