சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

திசை மாறும்பறவைகள்

திசை மாறும்பறவைகள்

நல்லிசை கண்டே நலமுடன் வாழ்வும்

துள்ளிசை ஆகவே துயரின்றி நின்றே

கள்ளமின்றியே வாழ்ந்தவர் கோடியே கேளாய்

பணத்தைக் கண்டதும் பண்பை இழந்தே

திசைமாறும் கூட்டம் திருந்தவே வாய்ப்பின்றி

அலைமோதும் நிலையில் ஆடும்

ஆட்டங்கள்

வலை போட்டு பிடிக்கவும் முடியாமல்

காலத்தின் கோலமோ கனியாத மனங்களும்

நிலையான எண்ணங்கள் நிலைகுலைந்து போகையிலே

மாயைகளுக்குள் நுளைந்தே மயங்கும் மனிதர்கள்

காயங்கள் கொண்டவர் கலங்கியே நின்றிடவே

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading