கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

தியாகி திலீபன்

நகுலா சிவநாதன்

தியாகி திலீபன்

உண்ணா நோன்பு இருந்த திலீபன்
மண்ணின் விடிவிற்காய் தன்னுயிர்
ஆகுதி ஆக்கினான்
தன்னைத் வருத்தி உடலை உருக்கி
உணர்வை சுருக்கி உலகிற்கு இழந்தான்

நல்லூரின் மன்றலிலே நம்தமிழர் விடிவிற்காய்
சொல்லோனே மருத்துவனே சோதியானீர்
கல்லோனே கற்றவனே கண்ணீரில் காணிக்கை
பல்லோரும் பார்க்க உம்முயிர் பிரிந்ததே!

வல்லோனே வண்டமிழர் உரிமைக்காய்
வைத்த கண் வாங்காமல் விழித்திருந்தீர்
காப்பாற்றுவார் என்றெண்ணி காத்திருந்தோம்
காலனவன் பிடியினிலே காணிக்கை ஆனதோ!
தியாக தீபம் திலீபனின் தியாகத்தைப் போற்றுவோம்

நகுலா சிவநாதன் 1779

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading