பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி . அபிராமி கவிதாசன்.

22.11.2022
சந்தம் சிந்தும் வாரம் -201
திருமதி.அபிராமி கவிதாசன்.

“ கனவு மெய்ப்பட “
கனவு மெய்ப்பட
காலமும் போராட்டம்
மனதில் உறுதியுடன்
மன்றினில் தேரோட்டம்
தினமும் உள்ளத்
திரையில் நினைவோட்டம்
நனவாகும் அந்த
நாளோ கொண்டாட்டம்

துணிவே துணையாய்
துன்பம் களைத்து
பணிந்து சபையில்
பண்பாய் நிலைத்து
பணியே கண்ணாய்
பகல்அல்லும் உழைத்து
அணிவேன் கனவை
அச்சம் தவிர்த்து

இலட்சிய கோட்டையை இலகுவாய் அடைய
அலட்சிய போக்கை அறிவால் உடைத்து
நிலவின் பிறையாய் நிதானம் அடைந்து
உலக வாழ்வில் உயிர்வரை விடைகொடு

ஆண்டு நூறு ஆயுளோ அற்பம்
வேண்டும் வரமும் விரைவில் கிட்டிட
ஆண்டவன் சாட்சி அள்ளித்தந்த பூமயில்
மாண்டோர் கனவும் மாண்புடன் மெய்ப்படும்..!

நன்றி பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading