புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பிற்காய்
சிவமணி புவனேஸ்வரன்.
தலைப்பு
*ஆறுமோ ஆவல்*

கூறும்பல் மொழிகளில் குன்றெனத் திகழ்வளர்
குவலயத் தமிழ்மொழியே

சாறெனப் பழச்சுவை சாற்றிட இனித்திடும்
சங்கத்தமிழ் அணங்கே

ஊறும் உணர்வினில் உள்ளத்தில் உதித்துமே
உண்மைகள் சொன்னவளே

பேறென வாய்த்துமே பெருமகிழ்வு ஊட்டியே
பேதையெனை ஈர்த்தவளே

தேறிட என்மனம் தேற்றிடும் வகையினில்
தேடிட அணைந்தவளே

மாறிடும் உலகினில் மாற்றங்கள் இன்றியே
மாண்பினில் காத்தவளே

வீறுகள் கொண்டுமே வீழ்ந்திடா வண்ணமே
விந்தைகள் புரிபவளே

ஆறுமோ ஆவலும் அறிந்திட உன்னையே
ஆற்றுவாய் அன்னையே

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading