தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

திரேஸ் மரியதாஸ் லண்டன்,சட்டன்

இன்றைய தலைப்பு
🌺மழை நீர்🌺

சோகங்களை மேகங்கள்
உற்றுநோக்கிக் கறுகறுவெனக் கனத்த மனதாய் கவலைகளைக் கருக்கட்டி ஓவென அழுகின்றதோவென
அப்பப் மழையைப் பார்த்து வியந்து
விண்ணாணமாய் நோக்குவதுவும் உண்டு

மழைநீரோடு எனது கண்ணீரையும் அப்பப்ப கலந்து கரைத்துவிடுவேன் விரைவாய் மீண்டும் ஆவியாகி இறந்துபோகாதவாறு நிறைவாய் சோறாக்கும் சேறான விவசாயிகளை
வாழவைத்து உளங்குளிரவைத்து
தரையை வளமாய் நிரையாக்க
வந்திடுவாய் மீண்டுமாய் என்னீரும் ஈரமான மழைநீராயென

மழைநீரே நீ சோவெனப் பொழிந்தபோது
ஆகா இதெல்லோ இன்பமென
நனைந்து உன்துளிகளுக்குள் விழுந்து
விளையாடியதுவும் அங்கங்க நீ சிந்திய நீரைப் பள்ளங்களில் அளைந்து
அள்ளிப் பள்ளியில் தெளித்ததுவும்
துள்ளித்துள்ளிப் பாய்ந்ததுவும்
முள்ளியாய்க் குத்துகிறதே உன்னைக் காணும்போதெல்லாம் தண்ணீரே வெந்நீராய்
ஆக்கம்-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading