திரேஸ் மரியதாஸ் லண்டன்,சட்டன்

இன்றைய தலைப்பு
🌺மழை நீர்🌺

சோகங்களை மேகங்கள்
உற்றுநோக்கிக் கறுகறுவெனக் கனத்த மனதாய் கவலைகளைக் கருக்கட்டி ஓவென அழுகின்றதோவென
அப்பப் மழையைப் பார்த்து வியந்து
விண்ணாணமாய் நோக்குவதுவும் உண்டு

மழைநீரோடு எனது கண்ணீரையும் அப்பப்ப கலந்து கரைத்துவிடுவேன் விரைவாய் மீண்டும் ஆவியாகி இறந்துபோகாதவாறு நிறைவாய் சோறாக்கும் சேறான விவசாயிகளை
வாழவைத்து உளங்குளிரவைத்து
தரையை வளமாய் நிரையாக்க
வந்திடுவாய் மீண்டுமாய் என்னீரும் ஈரமான மழைநீராயென

மழைநீரே நீ சோவெனப் பொழிந்தபோது
ஆகா இதெல்லோ இன்பமென
நனைந்து உன்துளிகளுக்குள் விழுந்து
விளையாடியதுவும் அங்கங்க நீ சிந்திய நீரைப் பள்ளங்களில் அளைந்து
அள்ளிப் பள்ளியில் தெளித்ததுவும்
துள்ளித்துள்ளிப் பாய்ந்ததுவும்
முள்ளியாய்க் குத்துகிறதே உன்னைக் காணும்போதெல்லாம் தண்ணீரே வெந்நீராய்
ஆக்கம்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading